Thursday, February 1, 2018

சீர்பெற சீற்றம்கொள் தமிழ் தாய் உணர்வால்




நேற்று 

தமிழால் உயர் நிறைபக்தி செய்தார்கள் 
பக்தியால் இறைதமிழ் செய்தார்கள் 
தமிழால் உலக நாகரீகம் வளர்த்தார்கள் 
நாகரீகம்மேம்பட தமிழ்புலமை வளர்த்தார்கள் 
தமிழ் ஆன்றோர் பலரை உருவாக்கியது     
அவரால் படைப்புகள் பல  உருவாகியது   
தமிழ் உலக பொய்யா மொழி முழங்கியது 
பொய்யாபுலவர் உலகநீதி தமிழாய் விளங்கியது

இன்று 
விளங்கா முகநூலில் பதிவுசெய்தாரே தமிழ் மிக்கார்    
முகத்துதியாய்  "லைக் செய்பவர் " மாண்புமிகு தமிழர் 
மாற்றாய் செய்யாதவர் தமிழ்-மரபு அறியா மூடர் -
மானதமிழன் யு-ட்யுபில் தமிழ் கொண்டு போர்க்களம் 
வெறும் கூத்தாடிகளின் கூடாரமாய் தமிழ்படும் அமர்க்களம் 
வாய்சொல் முனைவராய் ட்விட்டரில் வீரம் கொண்டோர் 
பகைமையை புலமையால் பேசும் பண்புதமிழ் பயின்றோர் 
அரசியல் தமிழ், ஆன்மீக தமிழ்யென்று வாய்மை மறந்து 

நாளை 
மறந்தது தமிழ்-இனம்  திருமூலர் தமிழ் சொல்லதைதான் 
"என்னை நன்றாக இறைவன் செய்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" என்றதை  
உரைத்த மூலனும் வடக்கிலிருந்து தமிழ்செய்ய 
உதித்தான் தெற்கில் உன்னத போகனை போல 
பின்னவனும் சீனத்திலிருந்து வந்தனன் தமிழர் வாழ்வு சிறக்க 
நவபாடனமாய் தமிழ்கடவுளை செய்தான் மானுடம் வாழ  
நாளை  கணியன்பூங்குன்றன் சொல்லே அறமாகி 


அறம்,பக்தி, சான்றாண்மை,நீதிஆகியவையே தமிழுயிர் 
அத்தமிழ் கொள்கை ஆணி கருவாகவேண்டும் 
காருண்யம்  மனிதம் அன்பும் தமிழுணர்வாய் வேண்டும்  
அரசியல், மதம், சாதி சாரா தமிழ் இனம் வேண்டும் 
ஓர் வர்கத்தின் அடையாள மொழி அல்ல தமிழ்  
பேரியக்கத்தின் சான்றாய் மண்ணுலகின் மனிதபுகழ்  
உலகத்திற்கே வாழநெறி தந்த மெய்க்கூட்டம் சாரே  
ஞானத்தால் அண்டத்தையாளும்  அறிவர் பாரே